கிராபிரவேசத்துக்கு வேண்டியவை .
தீபம் ,விநாயகர் ,லட்சுமி ,சரஸ்வதி படங்கள் ;பூரணகும்பம் ,புஷ்பபமாலை ,மஞ்சள் ,தாம்பூலம் ,பால் ,பழம் ,நைவேத்தியங்கள் ,உப்பு ,நெல் முதலிய தானியங்கள் ;சுவர்ணம் ,வெள்ளி ,நவரத்தினம் ,நவசாஸ்திரம் ,ஆபரணம் இவற்றை மங்கல வாத்தியக் கோஷத்தோடு சுமங்கலிகள் கொண்டு வர வீட்டிலே பிரவேசிக்கவும் .
முக்கிய குறிப்புகள் ;
பெரும்பாலும் தலைவாசலும் ,சுற்றுச்சுவரும் கதவின் வாசலும் நேருக்கு நேராக அமையும் வழக்கம் தற்போது உள்ளது .
தென்கிழக்கில் தான் சமையல் அறை அமைய வேண்டும் என்றாலும் ,வாயு மூலையிலும் சமையல் அறை அமைக்கும் வழக்கம் உண்டு .
பூஜை அறை தனியாக அமைக்க முடியாவிட்டால் ,வரவேற்பு அறையிலோ ,சமையல் அறையிலோ தனி அறையாக அமைத்துக் கொள்ளலாம் .
அறைகள் வாஸ்துப்படி அமையாவிட்டால் புத்தகத்தைப் படித்து விட்டு அந்தப் பகுதியை இப்படித்தோ அவசரப்பட்டு மாற்றுவதோ செய்யாமல் நிதானித்து வாஸ்துநிபுணர் ஆலோசனையை கேட்டறிவது நல்லது .
மரம் ,கிணறு ,ஆழ்துகளை போன்றவை சரியாக அமையாவிட்டால் அவசரப்பட்டு முடிவெட்டுப்பதை விட சற்று கவனித்து முடிவு எடுப்பது நல்லது .
வாஸ்து நூல்களில் ஒவ்வொரு நூலுக்கும் இடையே கருத்து வேறுபாடு சிறிய அளவில் இருக்கும் .அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டறிவது நல்லது .
வீட்டின் உள் அளவுகளில் உள்ள மாறுதல்கள் மற்றும் சங்க ஸ்தாபனம் ,மனை முகூர்த்தம் போன்ற விஷ்யங்களை விரிசாக எழுதினால் பெரிய அளவு புத்தகம் ஆகிவிடும் என்பதால் சிறிய அளவில் விளக்கப்படுள்ளது
சொல்லிய விஷயங்களே மற்றொரு இடத்தில படங்களின் மூலம் விளக்குவது ஒரு விஷயத்தை இரண்டுமுறை ஊன்றி கவனித்து புரிந்து கொள்ள உதவும் .
No comments:
Post a Comment