Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Wednesday, 4 December 2019

மீன் வளர்ப்பின் அடிப்படைத் தேவைகள்
 உப்பு நீர் நன்னீர் ஆகிய இரண்டிலுமே மீன் வளர்க்க முடியும்.
மீன்குஞ்சுகளை வளர்ப்பதற்கான வளர்ப்புக் குளம் நிலத்தின் தன்மை அதாவது மண்ணின் கார அமிலத்தன்மை 7.5 முதல் 85 வரை இருக்கலாம்.
மணல் சாரி நிலம் சரிப்படாது. நீர் விரைவில் குறைந்துவிடும் ஆகவே களிமண் பாங்கான நிலம் வேண்டும் .
ஆறு வாய்க்காலுக்கு அருகில் மீன் பண்ணை இருக்க வேண்டும் நல்ல பாதை வசதி இருக்கவேண்டும் அப்பொழுதுதான் மீன் வணிகர்கள்எளிதில் வந்து வாங்கிச் செல்ல முடியும்.
 மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மீன் வளர்க்கும் குளம்
சேதம் ஏற்படக்கூடாது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதி இருக்க வேண்டும்.
சாக்கடை நீர் ரசாயன கலவைகள் குளத்து நீரில் கலத்தல் கூடாது நீரில் போதிய அளவு பிராணவாயு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் .
குளத்தின் அடிமட்டத்தில் வேர்கள் தேவையற்ற குப்பை கூளங்கள் இருத்தல்கூடாது.
மீனை நாம் வணிகர்களுக்கு விற்றாலும் மீன் தொடர்பான எல்லா செய்திகளையும் அறிந்து கொள்ள வேண்டும் .
மீன் பிடிக்கும் முறை அதற்கான கருவிகள்
மீன்துறை சம்பந்தப்பட்டபொருளாதாரம் .
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் தூத்துக்குடி மீன் இயல் பட்டப் படிப்பு உள்ளது ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பட்டம் பெற்று மீன் வளர்க்கலாம் மற்றவர்களுக்கு உதவலாம்
 சென்னை தூத்துக்குடி மண்டபம் கடலூர் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வளத் துறையின் சார்பில்ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது அதனையும் பயன்படுத்திக்கொள்ளலாம் எல்லாவற்றுக்கும் மேலாக தேவைப்படுவது முயற்சியும் ஆர்வமும் ஆகும்.
வளர்ப்பதற்கு ஏற்ற மீன்வகைகள் 
பல்லாயிரம் மேற்பட்ட மீன் இனங்கள் உள்ளன அவை எல்லாவற்றையும் வளர்ப்பது சிரமம் .வளர்ப்பிற்கு ஏற்ற இரகங்களை வழக்கத்தில் உள்ளவை களைப்பற்றி சுருக்கமாகவேனும் அறிந்து கொண்டால் நல்ல முறையில் மீன்களை வளர்த்து லாபம் அடைய முடியும் இங்கு சில முக்கியமான மீன்களைப் பற்றி குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளது.
வெள்ளை கொண்டை
இதன் உடல் மென்மையாக இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது இது நீரின் மேல் மட்டத்தில் தாவர நுண்ணுயிரிகளை இரையாக கொள்வதால் இதனை சைவ மீன் என்று சொல்வார்கள் இதனுடைய இனப்பெருக்கம் ஜூன் ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.இதனை எளிமையாக அடையாளம் கண்டுவிட முடியும் கூர்மையான தலைப்பகுதியுடன் உடல் சற்று பெருத்து காணப்படும்.
சாதா கெண்டை
சாதா கெண்டையில்மூன்று இனங்கள் உண்டு தோல் கெண்டை செதில் கெண்டை கண்ணாடி கெண்டைஎன மூன்று வகை உண்டு குளிர்ந்த வெப்பநிலையில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும் இவை இயற்கை உணவு செயற்கை உணவு ஆகியவற்றை உண்ணும் தன்மை உடையவை .
குளங்களிலும் குட்டைகளிலும் இவை இயற்கை ஆகவே காணப்படுகிறது .
இவற்றின் இனப்பெருக்கம் சிறப்பானது .விரைவில் வளர்ச்சி அடையும் தன்மை உடையது .ஆகவே இவற்றின் முழுப்பயன் அடைய குட்டைக்கு அருகில் குளிர்ச்சி தரும் மரம் வளர்ப்பது நல்லது .கண்ணாடி கொண்டையின் உடல் நல்ல பளபளப்புடன் இருக்கும் .இதனால்தான் இதற்கு கண்ணாடி கொண்டை என பெயர் பரவலாயிற்று .தோல் கொண்டையின் உடல் தடித்த தோலினை உடையது .தோல் கொண்டையின் உடலில் செதில்கள் இருக்க மாட்டா .தோல் தடிப்பாக இருப்பதால் இதனை தோல் கொண்டை என்று சொல்லுவார்கள் .புல் கொண்டை அதிகமாக நீரில் உள்ள தாவரங்களையும் புற்களையும் தின்னும் இயல்புடையது .அதனால் இதனை புல்கொண்டை என அழைக்கிறோம் .
சேத்துக் கெண்டை 
இது உப்பு நீர் நல்ல நீர் ஆகிய எல்லா வகை நீரிலும் வளரும் தன்மை உடையது ஆணும் பெண்ணும் சேர்ந்து உலாவரும்.
அப்படி ஒரு காதல் ஆசை அறுபது நாள் என்பதெல்லாம் மனித குலத்திற்கு தான் இவை எப்போதும் இணைபிரியாது இல்லை இவை நீரில்அடிப்பகுதியில் முட்டையிடும் இயல்பு உடையவை குஞ்சுகளை நன்கு பராமரிக்கும் தன்மை கொண்டவை இவை நுண்ணுயிரிகளை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை .
ரோகுக் கெண்டை
 இந்த மீன் உண்பதற்குச் சுவையாக இருக்கும் .அதனால்  இதற்கு சந்தையில் நல்ல விலை உண்டு .இது 3 அடி நீளம் வரை வளரும் தன்மை உடையது .
எடையும் 20 முதல் 25 கிலோ வரை வரும். இது அதிகமான நீர் இருப்புபில் வாழும்
தன்மை உடையது . பால் கெண்டை பால் போன்று வெண்மையாக இருக்கும்
அதனால் இதற்கு பால் கண்ட என பெயர் வந்தது .
 தோப்பா
 கட்லா கெண்டை எனப்படும். இது லேசான சாம்பல் நிறத்தில் இருக்கும் இதில் முட்கள் அதிகம் இருக்கும் .அதே நேரத்தில் நல்ல சுவை உடையது இதில் 4 முதல் 5 நீளம் வரை வளரும் தன்மை உடையது. நல்ல வளர்ச்சி அடைந்த மீன் 50 கிலோ வரை எடை வரும் .இந்த வகை மீன் நீரின் மேற்பரப்பில் உள்ள பாசி ,புழு, பூச்சி ஆகியவைகளை விரும்பி உண்ணும் இயல்புடையது.
 கொடுவா மீன்
 மீன் கறி சாப்பிடுவோர் அனைவருக்கும் தெரிந்த பெயர் அதற்குக் காரணம் அதனுடைய சுவை தான். இந்த வகை மீன்களை அதிக விலை கொடுத்து வாங்க நுகர்வோர்கள் தயங்குவது இல்லை .இதன் வாழ்விடம் கடல் என்றாலும் நன்னீரிலும் சிறப்பாக வளர்க்கமுடியும் இதனை மற்ற மீன்களுடன் சேர்த்து வளர்ப்பது கடினம் .இது மற்ற மீன்களை தின்னும் தன்மை உடையது இது லேசான பச்சை வண்ணம் உடையது.
 பால் மீன்
 மற்ற மீன்களையும் சேர்த்து வளர்க்கும் முறைக்கு கூட்டு மீன் வளர்ப்பு முறை என்று பெயர். அவ்வாறு மற்ற மீன்களுடன் சேர்த்து மிகவும் ஏற்புடையது .இவை பெரும்பாலும் நீரின் அடிமட்டத்தில் இருப்பதையே விரும்பும் அடிமட்டத்தில் உள்ள பாசிகளை உண்ணும் . இவை இரண்டு ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு கிலோ எடை வரை இருக்கும்.
மடவை மீன்
 நன்னீரில் வளர்ப்பதற்கு ஏற்ற ரகம்  .உப்பங்கழிய பகுதிகளில் வளர்ப்பதற்கு சிறந்த ரகம். மடவை மீனில் நிறைய  வகை உள்ளது. இதன் தலை சற்று
மழுங்கலாக இருக்கும் .நீரில் இருக்கும் தாவர நுண்ணுயிரிகளை விரும்பி உண்ணும் தன்மை கொண்டவை, எனினும் பிண்ணாக்கு தவிடு போன்றவைகளை இவற்றிற்கு உணவாக இடலாம் . பால் மீனை தவிர மீன்களுடன் இவற்றைச் சேர்த்து வளர்த்து நல்ல லாபம் அடையலாம்.
  விரால் மீன்

 இந்த மீனை கூடை வளர்ப்பு முறையில் வளர்க்கலாம். விரால் மீன் சுவையானது நுகர்வோர்கள் சிலர் மீன்களை உயிருடன் வாங்குவதையே விரும்புகிறார்கள். அந்த வகையில் இந்த மீன் முதலிடம் பெறுகிறது .நாம் கொள்ளும்போது முக்கி முனகிக்கொண்டு உயிருடன் இருப்பதை பார்க்க முடியும் .அதனால் இதற்கு நல்ல விலை உண்டு.
விரால் மீன் சேற்று விரால் நாட்டு விரால் தகட்டு விரால் போன்றவை நாம்  அதிகமாக வளர்க்கிறோம் இதனை உற்றுப்பார்த்தாள் ஒரு உண்மை புலப்படும் .
நீருக்கு மேலே தலையை நீட்டி வெளிக்காற்றை சுவாசிப்பதை பார்க்க
முடியும் . பொதுவாக தண்ணீரில் உயிர்வளி குறையும்போது மீன்கள் இறந்து விடும். ஆனால், விரால் மீன் உயிர்வளி குறையும் போது வெளி காற்றை சுவாசித்து உயிர் பிழைத்துக் கொள்ளும். விரால் வளர்ப்பவர்கள் குளத்தின் ஒரு பக்கத்தில் நிழல் இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும் வெப்பம் அதிகமாகும் போது விரல்களை நாடிச் செல்லும் .மொத்த மீன் உற்பத்தியில் 20 விழுக்காடு உள்ளது,  இதிலிருந்து சொல்ல முடியும் .ஆகவே வளர்ப்பில் நல்ல கவனம் செலுத்தினால் நிறைய வருமானம் அடைய முடியும். இந்த வகை மீன் மீன்குஞ்சுகளை விரும்பி சாப்பிடும் அதற்காக குஞ்சுகளை குளத்தில் விட வேண்டிய அவசியமில்லை
ஜிலேபி கெண்டை மீன் ,நாட்டுமீன் ஆகியவற்றை சேர்த்து வளர்க்கலாம் இவை நிறைய முட்டைகளை இட்டு குஞ்சுகள் பொறிக்கும் இயல்பு உடையவை ஆகவே, குஞ்சுகளை விரால் மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளும் .ஜிலேபி கெண்டை மீனுக்கு   திலேபி என்ற பெயரும் உண்டு இந்த ஜிலேபி மீன். மற்ற மீன்களை போல் இல்லாமல் ஆண்டுதோறும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். கழிவுநீரில் இந்த மீன்களை வளர்க்க முடியும்.
  சிலேபி கெண்டை
 இந்த வகை மீன்கள் வேகமாக குஞ்சுகளை உற்பத்தி செய்பவை .இவற்றில் நிறைய ரகங்கள் உள்ளன .புதிதாக மீன்கள் வளர்க்க விரும்புவோர் இந்த மீன்களை வளர்க்கலாம்.
அதிகமாக  குளத்தில் இருப்புச் செய்தால் கூட பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை தட்பவெப்ப நிலை ஏற்படும் வேறுபாடுகளை தாங்கி வளரும் தன்மை உடையது. இவை தவிர மாமிசம் எல்லாவற்றையும் விரும்பி உண்ணும். இவற்றை தனியாகவும் வளர்க்கலாம் .நெல் வயல்களிலும் வளர்க்கலாம் மற்றும் மீன்களுடன் சேர்த்து வளர்க்கலாம் நல்ல பராமரிப்பில் மூன்றாவது மாதமே அறுவடைக்கு வந்துவிடும். நெல் வயலில் வளர்க்கும் போது இவற்றின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் நெற்பயிருக்கு உரமாகிறது .இதன் விலை குறைவு தான் எனினும் மற்ற மீன்களுடன் சேர்த்து வளர்ப்பதால் நல்ல பயன் அடையலாம் .
                              






No comments:

Post a Comment