Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Online Data Entry Typing Jobs Work From Home Part Time Jobs From Home Without investment

Ads Here

Monday, 23 March 2020

அம்மைநோய் -உணவு முறை மற்றும் சிகிச்சை முறை

அம்மைநோய் -உணவு முறை மற்றும் சிகிச்சை முறை :
வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்ணியமானவை .காய்ச்சல் ,சளி மற்றும் பெரிய நோய்கள் வைரஸ் கிருமிகளினால் ஏற்படுகிறது .இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் அதிகமாக ஏற்படுகிறது .இதனால் வைரஸை ஒழிக்க பெரும்  பிரச்சனையாக உள்ளது .சின்னமாய் வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் ஏற்படுகிறது .அம்மை நோய் ஏற்படவர்க்கு முதலில் காய்ச்சல் வரும் .சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்க்குரு போன்ற கொப்பளங்கள் ஏற்படும் .நோய்  எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கும் அம்மை நோய் ஏற்படுகிறது .கொப்பளங்கள் உள்ள இடத்தில் வடு ஏற்படும் .மற்றும் கொப்பளங்கள் வறண்டு உதிர்ந்து விடும் .
சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை கொண்டு சின்னம்மையை சரி செய்யலாம் .அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது முளை காய்ச்சல் மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்படுகிறது .ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்துவிட்டால் மிண்டும் வர வாய்ப்பில்லை .ஒரு வயதுநிறைவைத்தவர்கள் மற்றும் பெரியவர்கள் அம்மை நோய் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் .
நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள் மற்றும் குழந்தைகளை தட்டம்மை பெரும்பாலும் தாக்குகிறது .சின்னம்மை பெண்களுக்கு ஏற்படும் போது வயிறில் உள்ள கருவை தாக்குகிறது .அம்மை நோய்க்கான கிருமியை அழிக்க எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை .ஆனால் அம்மையை சரிசெய்ய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

பாதுகாப்பு முறை :
அம்மை நோயை தடுக்க குழந்தைகள் ஒன்பதாவது மாதத்திலிருந்து தடுப்பூசியை போட வேண்டும் .அம்மை ஊசியை சரியான முறையில் போட்டு கொள்வதன் மூலம் அம்மைநோய் ஏற்படுவதை தடுக்கலாம் .அம்மை பிரச்சனையை தடுக்க ஊசி போடுவது தெய்வக்குற்றம் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும் .எம் .எம் .ஆர் எனப்படும் தடுப்பூசி குழந்தைகள் ஒன்றை வயதாகும் போது கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும் .

டயட் :
அம்மை நோய் வெயில் காலங்களில் வைரசால் காற்று மற்றும் தண்ணீரின் மூலம் பரவுகிறது .அம்மை பரவும் காலங்களில் உடல் சூட்டை தணிக்க அதிக பழங்களை எடுத்து கொள்ளவேண்டும்.பெரியம்மை ,சின்னம்மை என அம்மைகள் இரண்டு வகைகள் உள்ளது .ஒரு வாரத்திற்கு அம்மை குறையாமல் இருக்கும் பின்னர் படி படியாக குறைந்து விடும் .மசிந்த உணவாக அம்மையின் போது எடுத்து கொள்ளவேண்டும் .பால் ,இளநீர் மற்றும் பழங்களை அதிகம் எடுத்து கொள்ளவும் .கடுமையான பத்தியங்களை மேற்கொள்ள வேண்டும் .வெறும் சாப்பாட்டை மட்டுமே எடுத்து கொள்ளவேண்டும் .

ரெசிபி :
ஆரஞ்சு சாதம் :
வாணலியில் ஒரு கப் நெய் விட்டு ஆரஞ்சு பழ தோலை வறுத்து அதில் சர்க்கரை ,உப்பு ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி ,அத்துடன் சாதத்தை சேர்த்து கிளறவும் .இறுதியில் கொத்தமல்லி தலை போட்டு கிளறவும் ,இத்துடன் உப்பு ,புளிப்பு சேர்ந்த கலவையில் இருக்கும் .

ரொட்டி உப்புமா :
தக்காளி 2,வெங்காயம் 1,பச்சை மிளகாய் 2,சீரகம் 1டீஸ்புன் உப்பு மற்றும் மல்லிதலை ஆகியவையுடன் 10 ரொட்டி துண்டை சேர்த்து கிளறவும் .இது அம்மை நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் .

ரவா இட்லி :
வாணலியில் எண்ணெய் விட்டு அத்துடன் கடுகு ,வெங்காயம் ,தக்காளி ,மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து அத்துடன் வெள்ளை ரவையை சேர்த்து கிளறவும் .
பாட்டி வைத்தியம் :

  • தேன்,நெய் ,வேப்பிலை ஆகியவற்றை போட்டு அம்மை காலங்களில் புகை பிடித்தால் காய்ச்சல் சரியாகும் .
  • பாலில் முருங்கை கீரையை கொதிக்க வைத்து குடித்தால்  இழந்த சக்தியை மீண்டும் பெறலாம் .
  • பூண்டு ,வெங்காயம் இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்  நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம் .
  • சர்க்கரை மற்றும் உப்பை தண்ணீரில் சேர்த்து குடித்தால் உடல் சோர்வு தணியும் .

No comments:

Post a Comment