தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடிவளர
எளிய இயற்கை வழிமுறைகள்
➽ஆலிவ் ஆயில் சிறிதளவு சூடாக்கி ,தினசரி இந்த ஆயில் தேய்த்து 5மணி நேரம் கழித்து குளித்து விட வேண்டும் .பின்பு முடி பளபளபாக இருக்கும் .
➽கூந்தல்
வளர்ச்சிக்கு உடல் நிலை மிகமிக
முக்கியமான ஒன்று விதவிதமான ஆயிலை
பயன்படுத்துவதை விட சத்தான உணவு
கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது .
➽கருவேப்பிலை
உணவில் தேவைக்கு அதிகமா சேர்த்து கொள்ளலாம்
.அவை முடி வளர்ச்சிக்கு நன்கு
உதவும் .
➽செம்பருத்தி
சாறு எடுத்து அவற்றை முடிஉதிரிந்த
இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக
வளரும் .
➽தாமரை
இலையின் சாறு எடுத்து அவற்றை
நல்லெண்ணெய்யுடன் சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும்
.இதனை தலை சொட்டையான இடத்தில்
தேய்க்க வேண்டும் ,பின்பு முடி கருகருவென
வளரும் .
➽.வெந்தயத்தை நீர் பயன்படுத்தி
நன்கு அரைத்து அதனை தலையில் தேய்த்து விட்டு ,பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளித்து விட வேண்டும்
.இந்த வழிமுறையை
அடிக்கடி பயன்படுத்துவதால் முடி நன்கு வளர்வதோடு
,முடி கொட்டுவதும்
நீங்கும் .
➽தேங்காய்
எண்ணெய் மற்றும்
மருதாணி சேர்த்து அதனை நன்கு காய்ச்சி வடிகட்ட
வேண்டும். பிறகு இதனை தினசரி
பயன்படுத்துவதால் முடி கருமை பெரும்
➽இளநரை மற்றும் பித்த நரை மறைய நாள்தோறும் காலையில் 1அல்லது 2
ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும் .
➽தினமும் 20 நிமிடம் பாதாம் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும் .
➽முடி வளர்வதற்கு தானிய வகைகள் அதிக அளவில் உண்ண வேண்டும் அதாவது பச்சைக் காய்கள் ,பருப்பு வகை போன்றவை அதிக அளவில் உண்ணுவதால் முடி வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் .
➽முடி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் முடி நன்கு வளரவும் இயற்கை முறையை கையாள வேண்டும் .
➽முடியின் வேர்களுக்கு வாரம் 2 அல்லது 3 முறை மசாஜ் செய்வதன் மூலம் முடி வளர்ச்சி பெரும் .
➽கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் எண்ணையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்தால் முடி வளர ஏதுவாக இருக்கும் .
➽கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் எண்ணையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்தால் முடி வளர ஏதுவாக இருக்கும் .
No comments:
Post a Comment